ரிலீசுக்கு தயாரான டீன்ஸ் – போலீசில் புகார் அளித்த நடிகர் பார்த்திபன் – இந்த படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

ரிலீசுக்கு தயாரான டீன்ஸ் – போலீசில் புகார் அளித்த நடிகர் பார்த்திபன்: தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளை கொண்டவர் தான் பார்த்திபன். தற்போது இவர் இயக்கிய திரைப்படம் தான் டீன்ஸ். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு இருந்து வருகிறது.

மேலும் படத்தை வருகிற ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்பொழுது பார்த்திபன் விஎப்எக்ஸ் பணிகளை செய்த நிறுவனத்தின் மீது  போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், ” டீன்ஸ் படத்தின் VFX காட்சிகளை உருவாக்க கோவையை சேர்ந்த சிவ பிரசாத் என்பவர் பணியாற்ற அவருக்கு 68.5 லட்சம் ரூபாய் பேசப்பட்டு இருக்கிறது.

Also Read: விக்னேஷ் சிவனின் “LIC” திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டதா? – வெளியான ஷாக்கிங் தகவல்!

ரிலீசுக்கு தயாரான டீன்ஸ் – போலீசில் புகார் அளித்த நடிகர் பார்த்திபன்

அவர் ஏப்ரல் மாதத்தில் முடித்து தருவதாக கூறப்பட்ட நிலையில்,  42 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறார். ஆனால் அவர் தாமதம் ஆக்கியதால் மீத பணத்தை பார்த்திபன் தராமல் இருந்திருக்கிறார். இப்படி இருக்கையில், மீண்டும் 88.4 லட்சம் பணம் கேட்டு இமெயில் அனுப்பிய அந்த நபர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment