தமிழக அரசின் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது 2024 – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !

சமூகநீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசின் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது 2024 தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது 1995 ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00 ,000 விருதுத்தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. அத்துடன் இவ்விருதாளர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தேர்வு செய்யப்படுகிறார்

2024 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்வு செய்யும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே சமூகநீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதியுடையவர்கள் தங்களின் விண்ணப்பத்தினை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தங்களின் விண்ணப்பம் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூகநீதிக்காக பாடுபட பணிகள் குறித்த விவரம் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

15,000 டெபாசிட் செய்தால் – 10 லட்சத்துக்கு மேல் வருமானம் – இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பியுங்கள்!

அத்துடன் 2024 ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பம் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.12.2024 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW

Leave a Comment