தூத்துக்குடி  குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா – தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தூத்துக்குடி  குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: இஸ்ரோ – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து வான்வெளியில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ISRO தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் 2வது விண்வெளி நிலையத்தை நிறுவ இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, இஸ்ரோவின் துணை நிறுவனமான இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO – டிட்கோ) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி விண்வெளித் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு என்ற சமீபத்திய வெளியான அறிவிப்பை தற்போது சாத்தியமாகியுள்ளது.

மேலும் அதன் முயற்சியாக  தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் பூங்கா விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட இருக்கிறது. குறிப்பாக இந்த மையம் மேம்பாடு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புக்கான செயல்படும். எனவே இந்த மையத்தின் மூலம் தேசிய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட 2ல் முக்கிய பங்கு வைத்த முக்கிய மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Leave a Comment