டெல்டா விவசாயிகளுக்கான குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டம் – தமிழக அரசு அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு சார்பில் டெல்டா விவசாயிகளுக்கான குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டம் வழங்க ரூ.78.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பருவ மழையால் நிரம்பும் மேட்டூர் அணை நீரானது தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவை பயிர் சாகுபடிக்காக ஜுன் 12 ஆம் தேதி திறந்து விடப்படுவது மரபு.

அந்த வகையில் எதிர்பாராத விதமாக பருவமழை பொய்த்துப்போனதால் மேட்டூர் அணையில் இந்த ஆண்டுகான நீர் வரத்து போதிய அளவு இல்லாத காரணத்தால், டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு நீரை திறந்து விட காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வேளாண்மை மக்களின் நலன் கருதி அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் குறுவை சாகுபடியாளர்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டும், டெல்டா விவசாயிகளை காக்கும் பொருட்டு ரூ.78.67 கோடி மதிப்பீட்டில்,

குறுவை சாகுபடி தொகுப்பை விவசாயிகளுக்கு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என வேளாண்துறை அமைச்சர் ம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் நெற்பயிர் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4000 வீதம், 1 இலட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு ரூ.40 கோடி நிதி தமிழக அரசு அரசு சார்பில் வழங்கப்படும்.

வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு, சுமார் 2,000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய விலையில் ரூபாய் 3.85 கோடி மதிப்பில் வழங்கப்படும்.

இதனையடுத்து பயறு வகைப் பயிர்களை பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யத்தேவையான 50 சதவீத மானியத்துடன் கூடிய தரமான விதைகள்,

சூடோமோனாஸ், திரவ உயிர் உரங்கள் மற்றும் இலை வழி உரம் தெளிக்கவும், ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதியும்,

பயறுவகைப் பயிர்களின் மகசூல் திறனைஅதிகரிக்கும் பொருட்டு 50 சதவீத மானியத்தில் 10,000 ஏக்கர் பரப்பளவிற்கு நுண்ணூட்டச்சத்து வழங்கிட ரூபாய் 20 லட்சம் மானியம் வழங்கப்படும்.

மேலும் நுண்ணூட்டச் சத்து குறைபாடுள்ள 7,500 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலங்களுக்கு நெல் நுண்ணூட்டக் கலவை 50 சதவீத மானியத்தில் விநியோகிக்க ரூ.15 லட்சம் வழங்கப்படும்.

அத்துடன் துத்தநாக சத்து குறைபாடு உள்ள இடங்களுக்கு துத்தநாக சல்பேட் உரத்தை பயன்படுத்துவதற்கு, ஒரு ஏக்கருக்கு 250 ருபாய் வீதம்,

25000 ஏக்கர் பரப்பளவுக்கு, 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும்,

மேலும் 25000 ஏக்கரில் ஜிப்சம் பயன்பாட்டிற்காக ஏக்கர் ஒன்றுக்கு மானியமாக 250 ரூபாய் வீதம் 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

மாணவர்களுக்கு அடுத்த குட் நியூஸ் – தமிழ்ப்புதல்வன் திட்டம் எப்போது தொடக்கம்? முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!

டெல்டா மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வேளாண்பணி செய்வோருக்கு ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இழப்பினை ஈடுசெய்யும் வகையில்,

மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர சுமார் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை உதவியுடன் விசை உழுவை, களையெடுக்கும் கருவி, விதை மற்றும் உரமிடும் கருவி, இயந்திரக் கலப்பை, சுழற் கலப்பை, சாகுபடிக் கலப்பை,

பலதானியப் பிரித்தெடுக்கும் கருவி, ஆளில்லா வானூர்திக் கருவி மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட் போன்ற 442 கருவிகள் மானியத்தில் வழங்கிட ரூ.7 கோடியே 52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள திட்ட அறிவிப்புகளையும், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்தும் ரூ.78.67 கோடி மதிப்பீட்டில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டமாக செயல்படுத்திட தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment