பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலிச்சான்றிதழ்கள் தயாரிப்பு – இருவர் கைது !

தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலிச்சான்றிதழ்கள் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகம் பெயரில் போலிச்சான்றிதழ் தயாரித்தாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சங்கர் மற்றும் அவரது உதவியாளர் நாகப்பன் என இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட போலிச்சான்றிதழ்கள், ஜெராக்ஸ் இயந்திரம், மடிக்கணினி, பிரிண்டர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் Fielding Coach ஆக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்? … கவுதம் கம்பீர் திட்டம் என்ன?

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள இருவரும் இது போன்று பாதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலிச்சான்றிதழ்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது தற்போது விசாரணையில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment