டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்தில் தெரியுமா? மாணவர்கள் குஷி!

பொதுவாக விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சில முக்கிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழா மிகவும் பிரபலமானது. இந்த தேவாலயத்தில் 2024 ஆண்டு திருவிழா நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் முதல் வாரம் வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வு நாளை நடைபெற இருக்கிறது.

எனவே இதை காண மற்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் கலந்து கொள்ள இருப்பதால், நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை டிசம்பர் 3ஆம் தேதி Leave அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற டிச.., 14 (சனிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்தடையா? இதோ முழு விவரம்!
இன்றைய தங்கம் விலை நிலவரம் (30.11.2024) ! சரிவை சந்தித்து வரும் கோல்ட் ரேட் !
இன்று பிற்பகல் கரையை கடக்கும்  ஃபெஞ்சல் புயல் – சென்னைக்கு வரப்போகும் புதிய ஆபத்து!
நாளை (நவ.30) பள்ளி கல்லூரிகளுக்கு லீவு – எந்த மாவட்டத்துக்கு தெரியுமா?
கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி UG பட்டப்படிப்பை 2 வருடத்தில் முடிக்கலாம் – UGC அறிவிப்பு!
ஹெல்மெட் மாற்றி நிச்சயதார்த்தம் செய்த ஜோடி? அடடே இப்படி ஒரு காரணமா?
தவெக கட்சியில் இணைந்த வாழை பட சிறுவன் – இணையத்தை கலக்கும் புகைப்படம்!

Leave a Comment