விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – என்ன காரணம் தெரியுமா? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

புயல் காரணமாக விழுப்புரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் நாளை டிசம்பர் 4ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

மாணவர்களுக்கு அறிவிப்பு:

தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஃபென்ஜால் புயல் காரணமாக சனிக்கிழமை இரவு கரையைக் கடந்த போது  விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களுக்கும் மேல் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால், மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கு புதன்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, விழுப்புரம் நகரில் புதிய, பழைய பேருந்து நிலையம், திருச்சி – சென்னை சாலைகள், கிழக்கு புதுச்சேரி சாலை என்று நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால், தாழ்வான பகுதிகளிலும், குடிசைப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. இன்னும் பல இடங்களில் மழைநீர் வடியாததால், மாணவர்களின் நலன் கருதி நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

அதிக ஆபத்துள்ள உணவு “தண்ணீர் பாட்டில்” – FSSAI திடீர் முடிவு!
குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி: வெள்ள நிவாரண நிதி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மன்சூர் அலிகான் மகனிடம் காவல்துறை விசாரணை – எதற்கு தெரியுமா?
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!
திருவண்ணாமலை மண்சரிவு விவகாரம் – இரண்டு பேர் உடல் கண்டெடுப்பு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் மீண்டும் நிலச்சரிவு – குலுங்கும் தி.மலை !
TNEB வெளியிட்ட நாளை மின்தடை (04.12.2024) பகுதிகள் – மாவட்டம் தோறும் பவர் கட் விவரம் உள்ளே !
டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்தில் தெரியுமா? மாணவர்கள் குஷி!
தமிழக அரசின் ஔவையார் விருது 2024 ! பெண்களுக்கு அறிய வாய்ப்பு !
தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்தடையா? இதோ முழு விவரம்!

Leave a Comment