ஆசை ஆசையாய் கேட்ட பொண்டாட்டி.., செய்ய மறுத்த கணவன்.., புதுமணத் தம்பதி விபரீத முடிவு!!

புதுமணத் தம்பதி விபரீத முடிவு

வேலூர் மாவட்டம் திப்பசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் தான் ரவி. இவர் தனது மனைவி ராஜலட்சுமி, மகன் பூவரசன்(26) ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து டிரைவராக பணியாற்றி வந்த பூவரசன்,  ஐஸ்வர்யா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்யாணமாகி சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவருடைய அப்பா, அம்மா வெளியூருக்கு சென்ற நிலையில், அவர்கள் தனியாக இருந்து வந்துள்ளனர். இந்த சமயத்தில் ஒரு கல்யாணத்திற்கு தன்னை அழைத்து செல்லுமாறு கனவிடம் மனைவி கேட்டுள்ளார். ஆனால் கணவன் மறுத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த நிலையில், வீட்டுக்கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் கதவு திறக்காத நிலையில், ஜன்னல் கதவை திறந்து பார்த்த கணவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வெளியே அழைத்துச் செல்லாததால், அவர் தூக்கில் தொங்கியுள்ளார். இதை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், வேதனையை தாங்க முடியாமல் கணவன் கழிவறைக்கு சென்று அங்கிருந்த ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கிருந்த உறவினர்கள் மருத்துவரிடம் அழைத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

“மஞ்சும்மல் பாய்ஸ்” இயக்குனருக்கு கொக்கி போட்ட பிரபல தமிழ் நடிகர்.., எல்லாம் படத்தோட வெற்றி தான் காரணம்?

Leave a Comment