விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாணவி ஸ்ரீமதி தாயாரின் மனு நிராகரிப்பு – தேர்தல் அலுவலகத்தில் தர்ணா?

Vikravandi by election 2024: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாணவி ஸ்ரீமதி தாயாரின் மனு நிராகரிப்பு: விக்கிரவாண்டி1 இடைத்தேர்தல் வருகிற அடுத்த மாதம் ஜூலை 10ம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்து இருந்தது. மேலும் இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி முடிவடைந்தது. இதில் மொத்தம் 64 பேர் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதில் கடந்த  2022ம் ஆண்டு கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின்  தாயார் செல்வியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இது குறித்து அவர் பேசிய அவர், ” தனது மகளுக்கு நடந்த கொடுமை போல் இனி வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது என்பதற்காக தான் இந்த தொகுதியில் போட்டியிட நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவருடைய வேட்புமனு தாக்கல் நிராகரிக்கப்பட்ட நிலையில், தேர்தல் அலுவலரின் நடவடிக்கையை எதிர்த்து அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் இறந்த ஸ்ரீமதியின் தாயார்.

ஹரியானாவில் பட்டப்பகலில் புதுமண தம்பதி சுட்டுக்கொலை… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்

  1. Vikravandi by election latest news ↩︎

Leave a Comment