சாத்தூரில் பட்டாசு ஆலை வெடித்து 3 பேர் பலி – தீவிரம் காட்டும் மீட்பு படையினர்!!

தமிழகத்தில் உள்ள சாத்தூரில் பட்டாசு ஆலை வெடித்து 3 பேர் பலி – சமீப காலமாக பட்டாசு ஆலைகள் வெடித்து வரும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் தான் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் ஒரு பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

அந்த ஆலையில் கிட்டத்தட்ட 100 பேர் வேலை பார்த்து வருகின்றனர். எனவே வழக்கம் போல் காலையில் இன்று வேலைக்கு சென்றுள்ளார். இது வார இறுதி என்பதால் மிக குறைந்த ஆட்கள் மட்டுமே வேலைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சென்னைக்கு விமானத்தில் கொக்கைன் கடத்தி வந்த பெண் – அதிரடியாக கைது செய்த காவல்துறை!

மேலும் தென் மாவட்டங்களில் உள்ள சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தான் இது மாதிரியான துயர சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மக்கள் பலரும் தங்களது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு அரசியல்வாதிகள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

Leave a Comment