குவைத் தீ விபத்து விவகாரம் .. உயிரிழந்த குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!!

kuwait fire accident குவைத் தீ விபத்து விவகாரம்: குவைத் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரில் அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான 6 மாடி  அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மூன்று பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குவைத் தீ விபத்து விவகாரம்

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தெற்கு குவைத்தில் நேர்ந்த கோர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் நிவாரணம் வழங்க இருப்பதாக பிரதமர் மோடி நடத்திய கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு அரசியல் வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

குவைத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து – 40 இந்தியர்கள் பலி!!

Leave a Comment