அடக்கொடுமையே.., தூங்கி கொண்டிருந்த 82 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்.., துண்டில் போட்டு தூக்கிய போலீஸ்!!!

உலக நாடுகளில் பல பகுதிகளில் பாலியல் வன்கொடுமைக்கு சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாட்டியை ஒரு சிறுவன் பாலியல் செய்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் தனியாக வாழ்ந்து வருபவர் தான் பொன்னி(82). இந்த மூதாட்டிக்கு சொந்தபந்தங்கள் யாரும் இல்லை என்பதால் அப்பகுதியில் வாழும் மக்கள் அவருக்கு உணவளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி சாலை ஓரத்தில் அந்த மூதாட்டி இறந்து கிடப்பதை பார்த்த மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தான் சில ஷாக்கிங் தகவல் கிடைத்தது. அதாவது அந்த மூதாட்டி பாலியல் வன்கொடுமையால் இறந்தார் என்று போலீசிடம் மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து அங்கிருந்த கேமராக்களை ஆய்வு செய்து பார்த்ததில் எர்ணாவூர் பகுதியை சேர்ந்த 18 வயது ஒருவன் நள்ளிரவில் அந்த மூதாட்டியை சாலையில் தரதரவென இழுத்து பாலியல் வன்கொடுமை செய்து தப்பி ஓடியுள்ளார். எனவே இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒருவழியா சிங்கிள் விரதத்தை முடிச்சுட்டாருப்பா? வாரிசு நடிகையுடன் ஜோடி சேரும் சிம்பு? அதுவும் முக்கிய நட்சத்திரத்தின் மகளா?

Leave a Comment