தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி என்பவர் பேங்கில் பணிபுரிந்த விவேக் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருந்து வரும் நிலையில், கணவருக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மனு தாக்கலில், எனது கணவர் விவேக் ராஜ் வங்கியில் பணிபுரிந்து வரும் நிலையில், அங்கு வரும் பெண்களிடம் போன் நம்பரை வாங்கி ஆபாசமாக இருந்துள்ளார்.
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/01/1-320-jpg.webp)
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/01/1-320-jpg.webp)
குறிப்பாக அவருடைய மொபைலில் கிட்டத்தட்ட 500 முதல் 1000 ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது. இதை அவரிடமும், அவரின் பெற்றோர்களிடம் கேட்டதற்கு தான் 2 மாத கர்ப்பிணி என்று கூட பாராமல் வெளியே சொல்ல கூடாது என்று சித்ரவதை செய்தனர். இதனால் எனக்கு அபார்ஷன் ஆனது. இது குறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/01/2-50-jpg.webp)
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/01/2-50-jpg.webp)
எனவே இங்கு நீதி கிடைக்கும் என்று நீதிமன்றத்தை நாடி வந்துள்ளேன் என்று மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிபிசிஐடி தரப்பு காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி சுகுமார குரூப் உத்தரவிட்டார்.