அரசு பணியாளர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வுஅரசு பணியாளர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

  அரசு பணியாளர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு. மத்திய அரசின் பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்த்தி வழங்குவதர்க்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்து உள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல் வெளியிட்டு உள்ளார்.

அரசு பணியாளர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு ! மத்திய அரசு பணியில் இருப்பவர்களுக்கு அடித்தது ஜாக்பாட் !

அரசு பணியாளர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

அமைச்சரவை கூட்டம் :

  இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகவிலைப்படி உயர்த்துவது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு அரசு பணியாளர்கள் மற்றும் அரசு பணியில் இருந்து விட்டு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைபடி உயர்த்துவது வழக்கம்.

JOIN WHATSAPP CHANNEL

4% உயர்வு :

   தற்போது அரசு 42% அகவிலைபடி மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் 4% அகவிலைபடியை உயர்த்துவதர்க்கு மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்து உள்ளது. இதனால் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் அகவிலைபடி 46% ஆக இருக்கின்றது. இந்த அகவிலைபடி உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்பட உள்ளது. 

லட்சக்கணக்கானோர் பயனடைவர் :

  அகவிலைபடி 4% உயர்ந்துள்ளதால் 48.67 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும் 67.95 லட்சம் ஓய்வூதியம் பெறுபவர்களும் பயனடைய உள்ளார். கெஜட்டட் சாராத ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்குவதர்க்கும் அமைச்சரவை அனுமதி அளித்து உள்ளது. 

Jio Financial மூலம் இனி வீடு , வாகன கடன் பெறலாம் !

இன்று மத்திய அரசு பணியாளர்களுக்கு போனஸ் வழங்க அனுமதி அளித்தது. மேலும் தற்போது அகவிலைபடி உயர்த்தி வழங்க அனுமதி அளித்து உள்ளது. மத்திய அரசு பணியாளர்களுக்கு இன்று டபுல் ஜாக்பாட் தான்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *