சென்னையில் வளர்ப்பு நாய் கடித்ததில் 11 வயது சிறுவன் காயம் ! மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

சென்னையில் வளர்ப்பு நாய் கடித்ததில் 11 வயது சிறுவன் காயம். சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த அஸ்வந்த் (வயது 11) என்ற சிறுவன் ஆலந்தூரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் தனது அத்தை வீட்டிற்கு கோடை விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அஸ்வந்த் அங்கு விளையாடிக் கொண்டிருக்கும்போது, அதே பகுதியில் வீட்டில் வளர்த்து வரும் சைபீரியன் ஹஸ்கி வகையை சேர்ந்த நாய் ஒன்று திடீரென சிறுவன் அஸ்வந்தை கடித்தது. நாய் கடிதத்தில் சிறுவனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து உடனே காயம் அடைந்த சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த வகையில் புகாரின் பேரில் சிறுவனை கடித்த நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பலி – பிரபல மருத்துவமனையை மூட உத்தரவு!!

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பூங்கா ஒன்றில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்து குதறிய நிலையில், தற்போது மீண்டும் அதே போன்ற சம்பவம் அரங்கேற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment