சென்னை உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பலி - பிரபல மருத்துவமனையை மூட உத்தரவு!!சென்னை உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பலி - பிரபல மருத்துவமனையை மூட உத்தரவு!!

சென்னை உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பலி: புதுச்சேரி இளைஞன் ஒருவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தாம்பரத்தில் உள்ள டி.பி.ஜெயின் மருத்துவமனையில் உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அப்போது சிகிச்சையின் போது 5 நிமிடங்களிலேயே இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அந்த இளைஞனுடைய பெற்றோர் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் விசாரணை குழுவை அமைத்து விசாரணை தொடங்கியது. இந்நிலையில் டி.பி.ஜெயின் மருத்துவமனை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ”  டி.பி.ஜெயின் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை. அதுமட்டுமின்றி போதுமான அளவு டெக்னீசியன்கள் இல்லை. குறிப்பாக  உயிர் காக்கும் சிகிச்சைக்கான கருவிகளும் இல்லை. மேலும் இறந்த இளைஞனின் பெற்றோர்களிடம் அறுவை சிகிச்சைக்கு முன்பு  உரிய தகவலை கூறி மருத்துவமனை நிர்வாகம் கையெழுத்து பெறவில்லை. சொல்லப்போனால் அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லை.  தனியார் மருத்துவமனை மீது பல தவறுகள் இருப்பதால் தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

ரேவண்ணா மருத்துவமனையில் திடீர் அனுமதி – பிரஜ்வால்  மீது  மேலும் ஒரு வழக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *