இந்தியாவின் முதல் CNG பைக்கை  அறிமுகப்படுத்தும் பஜாஜ் நிறுவனம் – எப்போது இருந்து தெரியுமா?

இந்தியாவின் முதல் CNG பைக்கை  அறிமுகப்படுத்தும் பஜாஜ் நிறுவனம்: உலகில் பிரபல நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் மக்கள் பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த சி.என்.ஜி மோட்டார் சைக்கிள் வருகிற ஜூலை 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதை கேட்ட பைக் பிரியர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். மேலும் இந்த CNG பைக்கை பஜாஜ் நிறுவனத்தின் புனேவில் உள்ள தொழிற்சாலையில் வைத்து மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் காட்சி படுத்த இருக்கிறது.

அதுமட்டுமின்றி  இதற்கு முன்னர் பஜாஜ் நிறுவனம் சி.என்.ஜி வில் ஆட்டோக்களை அறிமுகப்படுத்திய நிலையில், அதன் வியாபாரம் மேலோங்கி உள்ளது. எனவே இந்த பைக்கின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. மேலும் இந்த பைக் 110 முதல் 125 சிசி வரை இயக்கும் திறனுடையது. அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இந்த  பைக்கில் பல வெரைட்டிகளை கொடுத்துள்ளது. சொல்லப்போனால் சி.என்.ஜி மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போட்டும் ஓட்டலாம். ஜூலை 5ம் தேதி ஷோ ரூம்களில் இந்த பைக் 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் என கூறப்படுகிறது. cng bike introduced on july 5 – bajaj auto company – cng auto

நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர் – தேர்வு ரத்து செய்யப்படுமா? வெளியான திடுக்கிடும் பின்னணி?

Leave a Comment