ஆண் குழந்தையை பெற்றெடுத்த 9ம் வகுப்பு சிறுமி.., கர்ப்பத்துக்கு காரணம் யார்? வலைவீசி தேடி வரும் போலீஸ்!!ஆண் குழந்தையை பெற்றெடுத்த 9ம் வகுப்பு சிறுமி.., கர்ப்பத்துக்கு காரணம் யார்? வலைவீசி தேடி வரும் போலீஸ்!!

தற்போதைய காலகட்டத்தில் வினோதமான சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போது 9ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடகா, துமகூரு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி ஹாஸ்டலில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக அந்த சிறுமியின் உடல்நிலை சரியில்லை என்றும், வயிறு உப்பிய நிலையில் இருப்பதையும் ஆசிரியர்கள் கண்ட நிலையில், அந்த சிறுமியை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் அந்த குழந்தைக்கு யார் காரணம் என்று அந்த சிறுமிக்கு தெரியவில்லை. இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறை தற்போது தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கூடிய விரைவில் குற்றவாளியை கண்டுபிடித்து சிறையில் அடைப்போம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *