கல்யாணம் முடிந்தும் காதலனிடம் தகாத உறவில் இருந்த அக்கா.., தலையை துண்டாக வெட்டிய 20 வயது தம்பி!!கல்யாணம் முடிந்தும் காதலனிடம் தகாத உறவில் இருந்த அக்கா.., தலையை துண்டாக வெட்டிய 20 வயது தம்பி!!

தற்போது இருக்கும் காலகட்டத்தில் கொலை, கொள்ளை எல்லாம் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. தினசரி ஏதாவது ஒரு பகுதியில் கொலை சம்பவம் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மதுரையில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது மதுரை மாவட்டம் கொம்பாடி பகுதியில் வசித்து வரும்  சதீஷ்குமார்(28). என்பவர் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவரை காதலித்து வந்தார். ஆனால் இந்த காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மகாலெட்சுமிக்கு வேறு ஒரு பையனுடன் திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால் கல்யாணமான ஒரே வாரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து தாய் வீட்டில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து தனது காதலனுடன் தொடர்ந்து பேசிய மகாலெட்சுமியை அவருடைய தம்பி பிரவீன் குமார் கண்டித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் அந்த உறவை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த தம்பி, சதீஷ்குமாரை வழிமறித்து மிளகாய் பொடியை கண்களில் தூவி அரிவாளால் சரமாரியாக வெட்டியது மட்டுமின்றி  தலையையும் துண்டாக அறுத்து அருகில் உள்ள நாடக மேடையில் வீசிவிட்டு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்று அக்காவையும் கழுத்தை அறுத்துள்ளார். இதில் தடுக்க வந்த அம்மாவுடைய கையையும் துண்டாக வெட்டியுள்ளார். தற்போது அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிரவீன் தானாக போய் போலீசில் சரணடைந்த நிலையில், அவருக்கு உடந்தையாக 4 பேரை போலீஸ் தேடி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் டாப் 5 சீரியல்கள் .., ஜெஸ்ட் மிஸ்ஸில் கோட்டை விட்ட விஜய் டிவி.., லிஸ்ட் இதோ!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *