திமுக அரசு ஆட்சியை பிடித்ததில் இருந்து தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை கடந்த செப்டம்பர் மாதம் முதல் தகுதியுள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி கிட்டத்தட்ட 1 கோடியே 6 லட்சத்திற்கும் அதிகமானோர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து மேலும் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மகளிர் உரிமை தொகை கேட்டு மேல்முறையீடு செய்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!!
![மகளிர் உரிமை தொகை](https://www.skspread.com/wp-content/uploads/2024/01/1-58-jpg.webp)
![மகளிர் உரிமை தொகை](https://www.skspread.com/wp-content/uploads/2024/01/1-58-jpg.webp)
இந்நிலையில் மகளிர் உரிமை தொகை கேட்டு மேல்முறையீடு செய்தவர்களுக்கு சூப்பர் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது இந்த மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை வரும் 10ம் தேதி அன்று வங்கியில் வரவு வைக்கப்படும் நிலையில் மேல்முறையீடு செய்தவர்களில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.