15 கோடி அபேஸ்.., நம்பவச்சு கழுத்தை அறுத்த நண்பர்.., அதிரடி புகார் கொடுத்த எம்.எஸ்.தோனி.., என்ன நடந்தது?15 கோடி அபேஸ்.., நம்பவச்சு கழுத்தை அறுத்த நண்பர்.., அதிரடி புகார் கொடுத்த எம்.எஸ்.தோனி.., என்ன நடந்தது?

ஐபிஎல் தொடர் சில மாதங்களில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இதுவரை இல்லாத எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சிஎஸ்கே கேப்டன் தல தோனி இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு எடுக்க போகிறார். இந்நிலையில் எம்.எஸ். தோனி இருவர் மீது ராஞ்சியில் கிரிமினல் வழக்கு கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, கடந்த 2017ல் உலக அளவில் கிரிக்கெட் அகாடமியை நடத்துவதற்காக தோனியுடன் ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார். மேலும்  அதில் வரும் லாபத்தில் தோனிக்கு பகிர்ந்து கொடுக்கப்படும் என்று  ஒப்பந்தத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை அந்நிறுவனம் கடைபிடிக்கவில்லை என்றும் இதனால் 15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஸ் மீது புகார் கொடுத்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *