மக்களே இன்னும் நிவாரண தொகை வாங்கலையா? அப்ப இத முதல பண்ணுங்க.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!மக்களே இன்னும் நிவாரண தொகை வாங்கலையா? அப்ப இத முதல பண்ணுங்க.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

மிக் ஜாம் புயலால் சென்னை பெரிய பாதிப்பை சந்தித்ததை தொடர்ந்து, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பலத்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வரலாறு காணாத மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மக்களின் வீடு, பொருட்கள் எல்லாம் பெரும் சேதம் அடைந்தது. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூபாய் 6 ஆயிரம் நிவாரணத் தொகையும் மற்றும் மற்ற பகுதிகளுக்கு ரூ.1000 வழங்குவதாக அறிவித்தார்.

இதற்கான டோக்கன்களை ரேஷன் கடை வாயிலாக அரசு கொடுத்து வந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக நிவாரண தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில்,  நிவாரண தொகை தருவதற்கான கால அவகாசம் நாளை(03.01.2024) கடைசி நாள் என்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அதனால் உடனடியாக டோக்கனை கொடுத்து நிவாரண தொகையை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *