Home » செய்திகள் » மக்களே உஷார்.., தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை!!

மக்களே உஷார்.., தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை!!

மக்களே உஷார்.., தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை!!

வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மிக்ஜாம் புயலுக்கு பின்னர் வெள்ளம் அடங்கி ஒடுங்கிய நிலையில் கனமழை மட்டும் சென்னையில் உள்ள சில இடங்களில் கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரபிக்கடல் மேல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலவி வருவதால் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை அடித்து ஊற்ற போகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top