லோக்சபா தேர்தல்.., பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய முக்கிய புள்ளி.., சூடுபிடிக்கும் அரசியல் களம்!!லோக்சபா தேர்தல்.., பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய முக்கிய புள்ளி.., சூடுபிடிக்கும் அரசியல் களம்!!

லோக்சபா தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் முக்கிய புள்ளி  அதிமுக கட்சியில் இணைந்த சம்பவம் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். குறிப்பாக திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் மக்களின் வாக்குகளை பெற பல வாக்குறுதிகளை முன் வைத்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். மறுபுறம் தேர்தலில் எந்த வித சலுகைகளும் பணமும் கட்சி சார்பாக கொடுக்காமல் தடுக்க பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி தற்போது அதிமுக கட்சியில் இணைந்தால் அரசியல் களம் தற்போது தான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதாவது பாஜகவின் பட்டியல் அணி தலைவராக இருந்த தடா பெரியசாமி அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்று அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் அவருக்கு பாஜக  சீட் கொடுக்காததால் தான் அவர் அதிமுகவில் இணைந்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.   

மாணவர்களே ஜாலியோ ஜிம்கானா தான்..,  தமிழக பள்ளிகளுக்கு இந்த நாளில் விடுமுறை.., முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *