ஆறுச்சாமியவே அலற விட்ட பெருமாள் சாமியா இது? கோட்டா சீனிவாச ராவ் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க?ஆறுச்சாமியவே அலற விட்ட பெருமாள் சாமியா இது? கோட்டா சீனிவாச ராவ் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க?

ஆறுச்சாமியவே அலற விட்ட பெருமாள் சாமியா இது? தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல வில்லன்களில் ஒருவராக கலக்கி வந்தவர் தான் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார். குறிப்பாக விக்ரம் நடித்த சாமி படத்தில் பெருமாள் பிச்சை கதாபாத்திரம், தளபதி விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் சனியன் சகட என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தற்போது எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தற்போது மக்களவை தேர்தல் நான்காவது கட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

ஆறுச்சாமியவே அலற விட்ட பெருமாள் சாமியா இது?

அப்போது அவர் தனது நடக்க முடியாமல் ஒருவரை பிடித்து கொண்டு நடந்து வந்தார். அதை பார்த்த ரசிகர்கள் நம்ம [பெருமாள் பிச்சையா இது என்று கலக்கத்துடன் பார்த்து வந்தனர். ஒரு சிலர் ஒரு காலத்தில் ஆறுச்சாமியவே அலற விட்டவரா இப்படி ஆயிட்டாரு என்று வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Andhra Assembly Elections 2024: வாக்கு இயந்திரங்கள் உடைப்பு – 15 பூத் ஏஜென்ட் கடத்தல்-  ஆந்திர தேர்தல் வாக்குப்பதிவில் கடும் மோதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *