இனி நான் இதுல வரமாட்டேன்.., அது தான் எல்லாருக்கும் நிம்மதியா இருக்கும்.., ப்ரேமம் பட இயக்குனர் ஷாக்கிங் பதிவு!!இனி நான் இதுல வரமாட்டேன்.., அது தான் எல்லாருக்கும் நிம்மதியா இருக்கும்.., ப்ரேமம் பட இயக்குனர் ஷாக்கிங் பதிவு!!

மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இவர் தமிழில் நிவின் பாலினை வைத்து நேரம் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். கடைசியாக நயனை வைத்து கோல்ட் என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வரும் இவர், சமீபத்தில் ஒரு பதிவில் தனக்கு ஒரு நோய் இருக்கிறது என்றும், இதனால் இனி சினிமாவில் இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து தனது X பக்கத்தில் அரசியல், பிரபலங்கள் குறித்து, சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது அதில் அவர் கூறியிருப்பதாவது, இனிமேல் நான் எந்த ஒரு சோசியல் மீடியா பக்கத்திலும் வர போவதில்லை. ஏனென்றால் சமூக வலைத்தளங்களில் நான் பதிவிடும் கருத்துக்கள் என் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை, அவர்கள் என்னுடைய உறவினர்களால் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். நான் அமைதியாக இருப்பது எல்லாருக்கும் நிம்மதியை தரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

PF கணக்காளர்களே., இனி இந்த புதுப்பித்தலுக்கு ஆதார் கார்டு செல்லாது.., EPFO நிருவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *