நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி!!நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி!!

நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி சொத்துகள் முடக்கம்: பாலிவுட் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் விஜய்  நடித்த குஷி படத்திலும்,  மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட இரு படங்களில் நடித்திருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு இவர் பிரபல தொழிலதிபரான ராஜ் குந்திராவை  திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில்  பிட் காயின் மோசடியில் ஈடுபட்டு சுமார் 150 கோடி ரூபாயை ராஜ் குந்த்ரா மோசடி செய்து  சொத்துக்களை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அமலாக்கத்துறையினர் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி சொத்துகள் முடக்கம்

அப்போது ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான 97 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்க துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி ஷில்பா ஷெட்டி பெயரில் மும்பை ஜுகுவில் இருக்கும் வீடு, புனேயில் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்களா மற்றும் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் ஷேர்களை அமலாக்கப் பிரிவு முடக்கினர். மேலும் மோசடி பணத்தை வைத்து தான் அவர்கள் வீடு வாங்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஆபாச படங்களை எடுத்து வெளி நாட்டவருக்கு விற்பனை செய்த வழக்கில்  ராஜ் குந்த்ரா
செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

20 வருஷமாகியும் கொண்டாடப்படும் கில்லி படம்.. ரீ ரிலீசில் சும்மா வசூல் அள்ளுதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *