“சிறகடிக்க ஆசை” ரோகிணியின் ரியல் கணவரையும், மகனையும்  பார்த்துள்ளீர்களா? வெளியான கியூட்டான புகைப்படம்!!

விஜய் டிவியின் டிஆர்பியில் டாப் 3யில் இருந்து வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றனர். இதனை தொடர்ந்து மேலும் ரசிகர்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் “திருமதி செல்வம்” தொடரில் பூங்காவனம் கேரக்ட்ரில் நடித்த நடிகர் ஜெயமணியை சீரியல் குழு உள்ளே இழுத்துள்ளது.

மேலும் இனி வரும் எபிசோடுகளில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். மேலும் இந்த தொடரில் ரோகினி கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை சல்மா அருண். இதற்கு முன்னர் சில தொடர்களில் நடித்திருந்தாலும், தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் இவரின் கெரியருக்கு முக்கிய பங்காக இருந்து வருகிறது.

சீரியலில் இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு நிஜத்திலும் கல்யாணம் முடிந்து விட்டது என்று எத்தனை பேருக்கு தெரியும். அட ஆமாங்க., அவருக்கு அருண் என்பவருடன் திருமணம் முடிந்து ஒரு மகனும் இருக்கிறாராம். இந்நிலையில் நடிகை சல்மா அருண் தனது கணவர் குழந்தையுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

டிரம்ப்க்கு எதிரான பாலியல் வழக்கு.., ரூ.640 கோடி அபராதம்.., நீதிமன்றம் அறிவித்த அதிரடி உத்தரவு!!

Leave a Comment