தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம்: உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!!தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம்: உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!!

தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம்: உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!! – உலக பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க கோவிலாக விளங்கி வருவது தான் தஞ்சை பெரிய கோவில். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருந்து வரும் இந்த கோவிலில் வருடந்தோறும் சித்திரைப் பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டுக்கான திருவிழா இம்மாதத் தொடக்கத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக இருந்து வருவது தான் தேரோட்டம். அதன்படி இன்று  இன்று காலை தொடங்கி ராஜவீதிகளில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம்: உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!!

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவை முக்கிய விழாவான தேரோட்டம் திருவிழாவை முன்னிட்டு மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் சரிவு  –  தேர்தல் அதிகாரி அதிரடி விளக்கம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed