தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப TN TRB என்ற தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. எனவே நடப்பாண்டு நடக்க இருக்கும் தேர்விற்காக பலரும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வாணையம் தெரிவித்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 13ம் தேதி தேர்வாணையம் கால அவகாசம் கொடுத்தது.

இந்நிலையில் வருகிற ஜனவரி மாதம் 7ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற இருந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தேர்வு வருகிற பிப்ரவரி 4ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *