லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீது திடீர் FIR வழக்கு.., மும்பை போலீஸ் அதிரடி.., காரணம் என்ன?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அன்னபூரணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  கலவையான விமர்சனம் பெற்றது.  சமையல் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நயனுக்கு ஜோடியாக ஜெய் நடித்திருந்தார். இந்நிலையில் நயன்தாரா, ஜெய் மீது மும்பை காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா, ஜெய் நடித்த அன்னபூரணி
நயன்தாரா ஜெய் நடித்த அன்னபூரணி

அதாவது நயன்தாரா, ஜெய் நடித்த அன்னபூரணி படத்தில் நயன்தாரா இந்து மத உணர்வுகளை புண் படுத்தியதாகவும், ‘லவ் ஜிகாத்தை’ ஊக்குவிக்கும் விதமாக வசனங்கள் பேசி இருப்பதாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த படத்தை வாங்கியவர் முதல் ஓடிடி தளம் நிறுவனம் உள்ளிட்டோர்   மீது   வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா, ஜெய் நடித்த அன்னபூரணி
நயன்தாரா ஜெய் நடித்த அன்னபூரணி

Leave a Comment