பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி !பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி !

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மரணம். நடிகர் சரத் குமார் ஹீரோவாக நடித்த மாயி, திவான் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சூர்ய பிரகாஷ் இன்று காலை மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். அவரது இந்த திடீர் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான மாணிக்கம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சூர்ய பிரகாஷ். அதன் பின்னர் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் சரத்குமாரை வைத்து மாயி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் சரத்குமாருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாயி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் சரத்குமார் கூட்டணியில் திவான் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களை தொடர்ந்து அதிபர், வரச நாடு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில் வரச நாடு படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நிலையில், இன்று காலை இயக்குனர் சூர்ய பிரகாஷ் மரணமடைந்தார்.

இயக்குனர் சூர்ய பிரகாஷ் மறைவுக்கு நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஆருயிர் நண்பர் சூர்ய பிரகாஷ் இன்று காலை மரணமடைந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனையும்,

தவெக கட்சி தலைவர் விஜய்யின் அடுத்த மூவ் – நாளை தமிழகம் முழுவதும் மாபெரும் அன்னதானம் –  புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!

அதிர்ச்சியும் அளிக்கிறது. நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக்கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாரா மறைவு என்னை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது என்றும் அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *