ஐயா.. சாமி என்னை மன்னிச்சுடு., கேப்டன் நினைவிடத்தில் நடிகர் விஷால் குமுறல்.., என்ன சொன்னார் தெரியுமா?ஐயா.. சாமி என்னை மன்னிச்சுடு., கேப்டன் நினைவிடத்தில் நடிகர் விஷால் குமுறல்.., என்ன சொன்னார் தெரியுமா?

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் இறுதி அஞ்சலிக்கு வராத நடிகர்கள் தற்போது அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி என முன்னணி நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து இன்று விஷால் மற்றும் ஆர்யா கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், கேப்டன் மறைந்த அன்று என்னால் அவரோடு இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது.

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் விஷால் மற்றும் ஆர்யா அஞ்சலி
கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் விஷால் மற்றும் ஆர்யா அஞ்சலி

இப்ப அவரிடம் சொன்னது ஒரு வார்த்தை தான். என்னை மன்னிச்சுடு சாமி தான். கேப்டன் ஒரு நல்ல மனிதன், ஒரு நல்ல அரசியல்வாதி. அவரின் குடும்பத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறோம். மேலும் கேப்டனின் தைரியத்தை பார்த்து தான் நாங்கள் நடிகர் சங்கத்தை முன்னோக்கி நகர்த்தி வருகிறோம். புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரை வைக்க பரிசீலனை செய்ய இருக்கிறேன். மேலும் கேப்டன் பெயர் கட்டிடத்தில் பொறிக்கப்படும் என்று கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *