சுற்றுலா பயணிகளே.., இந்த அருவியில் குளிக்க தடை.. வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர இருக்கும் நிலையில் தென் பகுதியில் உள்ள மாவட்டங்களில் இரவு பகல் பாராமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று விடமால் கனமழை பெய்துள்ளது.

அருவியில் குளிக்க தடை

இதனை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வனத்துறையினர் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கனமழை காரணமாக இன்று குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Comment