சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள்சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள்

சாமியே சரணம் ஐயப்பா சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள். முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது என்பதை அனைவரும் அறிவர். அதுபோன்று விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் உண்டு. இந்தப் பதிவில் ஐயப்பனின் அறுபடை வீடுகள் எங்கே உள்ளது என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

முருகக் கடவுளுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை, என்ற அறுபடை வீடுகள் உள்ளது. அதுபோல விநாயகருக்கு திருவண்ணாமலை, திருமுதுகுன்றம், திருக்கடவூர், திருச்சி, பிள்ளையார்பட்டி, திருநாரையூர் ஆகிய இடங்களில் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த வகையில் சபரிமலையில் இருக்கும் ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் உள்ளன. அவை ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, எருமேலி, பந்தளம், சபரிமலை ஆகிய இடத்தில் உள்ளது. அவைகளைப் பற்றி விரிவாக காணலாம் வாங்க.

வாட்சப் குழுவில் இணைந்திடுங்கள்
சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள்

கேரள தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆரியங்காவு. தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு உள்ள ஆலயத்தில் அரசராக வீற்றிருந்து அருள் தருகிறார் ஐயப்பன். இவருடன் புஷ்கலை தேவி இருப்பது கூடுதல் விசேஷம். இங்கு சாஸ்தாவான ஐயப்பன் திருமணம் செய்யும் காட்சியை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் நிகழ்த்துவார்கள். மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு ஐயப்பன் காட்சி தருகிறார். அதனால் அவருக்கு “மதகஜ வாகன ரூபன்” என்ற பெயரும் உண்டு.

சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள்

கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. செங்கோட்டையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ஐயப்பன் இருக்கும் அனைத்து ஆலயங்களிலும் விக்கிரகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பரசுராமரால் அமைக்கப்பட்ட இந்த கோவிலில் மட்டும் விக்கிரகம் பழமை மாறாமல் காட்சியளிக்கிறது. கையில் அமுதமும் காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் இங்கு ஐயப்பன் காட்சியளிக்கிறார். இவருக்கு இருபுறமும் பூரண, புஷ்கலை தேவியர் காட்சி தருகின்றனர். இவரை “கல்யாண சாஸ்தா” என்று அழைக்கிறார்கள். திருமண வரம் வேண்டுவோர் வழிபட வேண்டிய சிறப்புமிக்க தலம் இது.

சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள்

கேரளாவில் குளத்துப்புழா என்ற இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்கு ஐயப்பன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். இதனால் அவரை “பால சாஸ்தா” என்று அழைக்கின்றனர். இந்த கோவிலின் கருவறை சிறுவர்கள் நுழையும் அளவின் உயரத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு விஜயதசமி அன்று வித்யாரம்பம் என்னும் நிகழ்ச்சி மிகுந்த சிறப்பாக நடக்கும். அன்று பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி தரப்படும். குழந்தை வரம் வேண்டி வழிபட வேண்டிய ஏற்ற தலம் இதுவாகும்.

உங்கள் ராசிக்கு கும்பகோணத்தில் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் முழு விபரம் உள்ளே !

சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள்

எருமை தலையைக் கொண்ட மகிஷியை, ஐயப்பன் வதம் செய்த தலம் இது என்று கூறப்படுகிறது. இதனால் எருமைக்கொல்லி என்று அழைக்கப்பட்டது. பின்னர் நாளடைவில் மருவி எருமேலி என்று அழைக்கப்பட தொடங்கியது. மகிஷியை வதம் செய்த மணிகண்டன் அவளது உடல் மீது நர்த்தனம் செய்ததன் நினைவாகவே பக்தர்கள் இன்றளவும் எருமேலியில் இருந்து நடனமாடியபடியே சபரிமலைக்கு பயணத்தை மேற்கொள்கிறார்கள். இந்த நடனத்திற்கு ‘பேட்டை துள்ளல்‘ என்று பெயர். இந்த ஆலயத்திற்கு அருகில் வாபரின் பள்ளிவாசல் உள்ளது. இங்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள்

பந்தளம் என்பது ஐயப்பன் வாழ்ந்ததாக கருதப்படும் அரண்மனையை குறிக்கும் இடமாகும். இங்கு பந்தள மன்னர் ராஜசேகரனால் கட்டப்பட்ட ஆலயம் உள்ளது. இந்தக் கோவில் அச்சன்கோவில் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ளது. சபரிமலை ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜையின் போது அணிவிக்கப்படும் திரு ஆபரணங்கள் அனைத்தும் இங்குதான் வைக்கப்பட்டுள்ளன. செங்கனூர் ரயில் நிலையத்தின் அருகில் இந்த கோவில் அமைந்துள்ளது.

கேரளாவில் இங்கு உள்ள ஐயப்பன் தர்ம சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். ஐயப்பன் இங்கு யோக சின் முத்திரையுடன் குத்துகாலிட்டு அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள் தருகிறார். இங்கு 18 படிகளை ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம். இங்கு ஐயப்பனின் சன்னதி வாசலில் தத்வமஸி என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த வாசகத்திற்கு நீ எதை நாடி வந்தாயோ அது நீயாகவே உள்ளாய் என்பது பொருள். உனக்குள்ளேயே இறைவன் இருக்கிறான். 41 நாட்கள் இருக்கும் விரதத்தை வாழ்கை முழுவதும் நீ மேற்கொண்டால் நீயும் கடவுளே என்பதுதான் இதன் உண்மையான விளக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *