எம்.எஸ். தோனி மீது பரபரப்பு புகார்? அப்ப IPL மேட்ச்? நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு!! எம்.எஸ். தோனி மீது பரபரப்பு புகார்? அப்ப IPL மேட்ச்? நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி தற்போது இந்த ஆண்டு நடைபெற இருக்கும் IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவரது மேல் புகார் எழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சில நாட்களுக்கு முன்பு தோனி Arka Sports Management நிறுவனம் தனக்கு தருவதாக கூறிய ஷேர் பணம் தற்போது வரை தரவில்லை என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதன் விசாரணை நாளை நடைபெற இருக்கிறது. அதற்கு முன் தோனி வழங்கறிஞர் தங்களது நிறுவனத்தை பற்றி பேட்டி கொடுத்து அவதூறு ஏற்படுத்திவிட்டதாக கூறி தோனி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோரின் நிறுவனமான ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் தெரிவித்துள்ளது. இதனால் தோனி IPL ல் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டு விடுமோ என்று ரசிகர்கள் சற்று அச்சத்தில் இருந்து வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *