ஐபிஎல் சீசன் 2024: ஆரஞ்சு தொப்பி லிஸ்ட்டில் இடம்பிடித்த 5 வீரர்கள் - முதலிடத்தில் இருக்கும் வீரர் யார் தெரியுமா?ஐபிஎல் சீசன் 2024: ஆரஞ்சு தொப்பி லிஸ்ட்டில் இடம்பிடித்த 5 வீரர்கள் - முதலிடத்தில் இருக்கும் வீரர் யார் தெரியுமா?

IPL 2024: ஆரஞ்சு தொப்பி லிஸ்ட்டில் இடம்பிடித்த 5 வீரர்கள்: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 கடந்த மாதம் 22 ஆம் தேதி ஆரம்பித்து மே 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மேலும் இந்த வருடம் கோப்பையை எந்த அணி கை பற்ற போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி வெற்றி கோப்பையுடன் பல தனிப்பட்ட விருதுகளும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அதிக ரன்கள் எடுத்தவருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்படும். எனவே சீசன் முடிவடையும் போது அதிக ரன்கள் எடுத்தவருக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. எனவே நடந்து வரும் சீசனில் இப்பொழுது வரை அதிக ரன்கள் எடுத்த முதல் 5 போட்டியாளர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  1. ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி இந்த சீசனில் 10 போட்டிகளில் மொத்தம்   500 ரன்களை குவித்து முதல் இடத்தில் உள்ளார்.
  2. சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் 9 போட்டிகளில் மொத்தம்  447 ரன்கள் குவித்து இரண்டாம் இடத்தில் பிடித்துள்ளார்.
  3. குஜராத் அணியில் விளையாடி வரும் சாய் சுதர்சன் இந்த சீசனில் 10 போட்டிகளில் மொத்தம்  418 ன்கள் குவித்து 3 ம் இடத்தில் பிடித்துள்ளார்.
  4. ஆர்.ஆர் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இந்த சீசனில் 9 போட்டிகளில் மொத்தம்  385 ரன்கள் குவித்து 4ம் இடத்தில் பிடித்துள்ளார்.
  5. எல்.எஸ்.ஜி அணியின் கேப்டன் கே எல் ராகுல் இந்த சீசனில் 9 போட்டிகளில் மொத்தம்  378 ரன்கள் குவித்து 5 ம் இடத்தில் பிடித்துள்ளார். 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை  சந்திக்கும் மனைவி – அனுமதி வழங்கிய திகார் சிறை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *