தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, பாலியல் என பல தவறுகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக பெற்றோர்களே தாங்கள் பெற்ற குழந்தைகளை கொலை செய்யும் சம்பவம் அனைவரது நெஞ்சையும் உலுக்கி எடுத்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சேலம் மாவட்டம் மாசி நாயக்கன் பட்டியில் தனது மனைவி நிர்மலா, மகன் மகளுடன் வசித்து வருபவர் தான் வெங்கடேஸ்வரன்.
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/01/2-146-jpg.webp)
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/01/2-146-jpg.webp)
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இவர் கெமிக்கல் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நிலையில் அதனை மகன் உடன் இருந்து பார்த்து வருகிறார். அவருடைய மகள் வெளியூரில் படித்து வருகிறார். தற்போது விடுமுறை நாளை கொண்டாட மகள் தந்தை வீட்டுக்கு வந்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று நிர்மலா வெளியே கடைக்கு சென்று வீடு திரும்பிய நிலையில், மகள் துணியால் கழுத்து நெரிக்கப்பட்டு கீழே விழுந்து கிடந்துள்ளார். இன்னொரு புறம் தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/01/1-280-jpg.webp)
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/01/1-280-jpg.webp)
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிர்மலா உடனே அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவர்களை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் இறந்து விட்டார்கள் என்று தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில் கடன் பிரச்சினையாக இருக்கலாம் அல்லது அவர் மகள் காதல் செய்திருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.