Home » செய்திகள் » தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை ! 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு !

தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை ! 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு !

தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை. தமிழகத்தில் உள்ள கோவை, தேனி , திருநெல்வேலி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் செங்கல்பட்டு,விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் இன்று நீலகிரி, கோவை, தேனி , திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் , திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

15 கோடி அபேஸ்.., நம்பவச்சு கழுத்தை அறுத்த நண்பர்.., அதிரடி புகார் கொடுத்த எம்.எஸ்.தோனி.., என்ன நடந்தது?

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

JOIN WHATSAPP CLICK HERE

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top