ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு 2023ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு 2023

  ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு 2023. கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தமிழக அரசின் பொதுத் துறையாக இயங்கி வருகின்றது. இங்கு ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பானது துறையில் சார்பில் வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , அனுபவம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காண்போம்.

ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு 2023 ! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் ! 

ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு 2023

அமைப்பின் பெயர் :

   பொள்ளாச்சி , கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப்பணியிடங்கள் இருக்கின்றது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

   ஓட்டுநர் ( ஜீப் டிரைவர் ) பணியிடங்கள் TNRDல் காலியாக இருக்கின்றது 

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

   ஒரு  ஓட்டுநர் பணியிடம் காலியாக இருப்பதாக துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கல்வித்தகுதி :

   அரசின் கீழ் செயல்படும் பள்ளிகள் அல்லது கல்லூரிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

JOIN SKSPREAD WHATSAPPCLICK HERE

வயதுத்தகுதி :

   18 வயது முதல் 42 வயது வரையில் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

   ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரையில் மாத ஊதியமாக துறையில் காலியாக இருக்கும் ஓட்டுநர் பணிக்கு நியமிக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு வழங்கப்படும். 

விண்ணப்பிக்க வேண்டிய நாள் :

   30.09.2023 முதல் 19.10.2023 அன்று மாலை 5.30 மணிக்குள் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

    மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் தங்களின் விண்ணப்பபடிவத்தினை நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கிளிக்செய்யவும்
OFFICIAL NOTIFICATION DOWNLOAD 

விண்ணப்பக்கட்டணம் :

    ஓட்டுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தபால் மூலம் சமர்ப்பிக்கப்பட இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

முக்கிய குறிப்பு :

 1. தகுதி இல்லாதவர்கள் அனுப்பும் விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்படும்.

 2. காலதாமதமாக அலுவலகத்திற்கு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

 3. விண்னப்பங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். முழுமையாக நிரப்பாத விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

  கமிஷனர் ,

  பஞ்சாயத்து அலுவலகம் ,

  பொள்ளாச்சி – வடக்கு ,

  கோயம்புத்தூர் – 642001 ,

  தமிழ்நாடு .

விண்ணப்பிக்க தேவையானவை :

  1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 

  2. பிறப்பு சான்றிதழ் 

  3. முகவரி சான்றிதழ் 

  4. சாதிச் சான்றிதழ் 

TNPL வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை :

  1. சாதி சான்றிதழ்  

  2. இருப்பிடச் சான்றிதழ்

  3. கல்வித்தகுதி சான்றிதழ்

  4. ஓட்டுநர் உரிமம் போன்றவைகளின் ஜெராக்ஸ் இணைக்கப்பட்டு அவைகளில் சுய கையொப்பம் செய்து இருக்க வேண்டும்.

தேர்வு முறைகள் :

  கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக இருக்கும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.   

நேர்காணலின் போது தேவையானவை :

  1. சாதி சான்றிதழ்  

  2. இருப்பிடச் சான்றிதழ்

  3. கல்வித்தகுதி சான்றிதழ்

  4. ஓட்டுநர் உரிமம் போன்றவைகளின் ஒரிஜினல் நேர்காணலின் போது கொண்டு வர வேண்டும். 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *