பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை.., 40 தமிழக மீனவர்கள் விடுதலை.., இலங்கை அரசு உத்தரவு!!பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை.., 40 தமிழக மீனவர்கள் விடுதலை.., இலங்கை அரசு உத்தரவு!!

பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை திறப்பதற்கு முன்னால் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று சென்னைக்கு வருகை தந்து கோகோ விளையாட்டை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து ராமேஸ்வரத்திற்கு செல்ல இருக்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடி வருகையையொட்டி முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்திற்கு வர இருக்கும் நிலையில் இலங்கை அரசு சிறையில் வைத்துள்ள 40 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த 40 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக அந்த 40 மீனவர்களும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அதாவது இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 18 பேரும், நாகை மாவட்டம் மீனவர்கள் 10 பேரும் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேர் என 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

ஐயோ.., காப்பாத்துங்க.., இரவு நேரத்தில் மாணவர்கள் அலறல்.., பள்ளி விடுதியில் திடீர் தீவிபத்து.., 13 பேர் பலி.., என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *