விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்த மூதாட்டி மாயம் - உறவினர் போட்ட அதிர்ச்சி ட்வீட் - சென்னையில் பரபரப்பு!!விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்த மூதாட்டி மாயம் - உறவினர் போட்ட அதிர்ச்சி ட்வீட் - சென்னையில் பரபரப்பு!!

விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்த மூதாட்டி மாயம்: மக்களவை தேர்தல் கடந்த 19ம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற போது பொது மக்களுடன் வரிசையில் நின்று சினிமா பிரபலங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி வாக்குப்பதிவு மையத்தில் தனது ஓட்டினை செலுத்தி வெளியே வரும் பொழுது சக்கர நாற்காலியில் இருந்த மூதாட்டி ஒருவருடன் செல்பியும் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் அந்த மூதாட்டி குறித்து ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்த மூதாட்டி மாயம்

அதாவது, விஜய் சேதுபதியுடன் போட்டோ எடுத்து கொண்ட அந்த மூதாட்டி கடந்த 22ம் தேதி முதல் காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்த பாட்டியின் பேரன் சோசியல் மீடியாவில், ” எனது பாட்டி டாக்டர் கௌசல்யா மற்றும் அவருடைய மகன் மனநலம் குன்றிய மகன் தினேஷ் ஆகியோர் 22/04/2024 முதல் காணவில்லை. அவர்கள் இருவரும் கடந்த 22ஆம் தேதி வெளியே சென்றனர். அதன் பின்னர் அவர்கள் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் காவல்துறையால்  Triplicane signal வரை தான் கண்டு பிடிக்கப்பட்டது.  எனவே இந்த ட்வீட்டை ஷேர் செய்து அவர்களை தேட உதவுங்கள் என விஜய் சேதுபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.  

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை –   2,42,000 ரூபாய் அபராதம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *