இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை ! சுனாமி எச்சரிக்கை விடுத்த அந்நாட்டு அரசு ! மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் !இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை ! சுனாமி எச்சரிக்கை விடுத்த அந்நாட்டு அரசு ! மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் !

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை. இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள சுலவேசி மாகாணத்தில் ருயாங் தீவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கியது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருக்கும் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் எரிமலையை சுற்றி 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் எரிமலை வெடித்ததால், அருகில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அந்த வகையில் எரிமலை வெடிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தோனேசியாவில் உள்ள குறிப்பிட்ட பகுதி முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: குற்றவாளிகளுக்கு துணை போன போலீசார் – சிபிஐ அதிர்ச்சி தகவல்!

இதனை தொடர்ந்து இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறுவது இந்த மாதத்தில் இது 2வது முறையாகும். இதற்கு முன் கடந்த 16ம் தேதி ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *