தமிழகத்தில் அமுல் பால்பண்ணை அமையவில்லை ! தமிழக பால்வளத்துறை விளக்கம் !தமிழகத்தில் அமுல் பால்பண்ணை அமையவில்லை ! தமிழக பால்வளத்துறை விளக்கம் !

தமிழகத்தில் அமுல் பால்பண்ணை அமையவில்லை. குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமுல் நிறுவனமானது, தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தை போன்று பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தி நிறுவனமாகும். அந்த வகையில் அமுல் நிறுவனமானது தமிழகத்தில் பால்பண்ணைகளை அமைக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அமுல் நிறுவனம் சார்பில் தமிழகத்தில் தற்போது வரை எந்த பால்பண்ணைகளும் அமைக்கப்படவில்லை என பால் வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமுல் நிறுவனம் தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பால் விற்பனையை தொடங்கியுள்ளது.

பள்ளி ஆசிரியர்களை அலுவலக பணிக்கு பயன்படுத்தக்கூடாது ! பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை !

இதற்க்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழக அரசின் பால்வளத்துறை அமுல் நிறுவனம் தமிழகத்தில் இதுவரை பால்பண்ணை அமைக்கவில்லை எனவும், அப்படி எதுவும் நடக்கவில்லை எனவும் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *