பள்ளி ஆசிரியர்களை அலுவலக பணிக்கு பயன்படுத்தக்கூடாது ! பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை !பள்ளி ஆசிரியர்களை அலுவலக பணிக்கு பயன்படுத்தக்கூடாது ! பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை !

பள்ளி ஆசிரியர்களை அலுவலக பணிக்கு பயன்படுத்தக்கூடாது. அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அவர்களின் பணிகளை தவிர, பள்ளி ஆசிரியர்களை அலுவலகப்பணி போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களை அலுவலகப்பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது எனவும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை பள்ளியின் இளநிலை உதவியாளர்கள் அல்லது உதவியாளர் செய்து தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் வளர்ப்பு நாய் கடித்ததில் 11 வயது சிறுவன் காயம் ! மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

அவ்வாறு செய்யாவிட்டால் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *