நொய்டாவில் சிறுமியை கடித்துக் குதறிய நாய்- வெளியான ஷாக்கிங் வீடியோ!!நொய்டாவில் சிறுமியை கடித்துக் குதறிய நாய்- வெளியான ஷாக்கிங் வீடியோ!!

நொய்டாவில் சிறுமியை கடித்துக் குதறிய நாய்: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக நாய்கள் வெறி பிடித்து குழந்தைகளை கடித்து குதறிய சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட சென்னையில் உள்ள பூங்கா ஒன்றில் 5 வயது சிறுமியை இரண்டு செல்லப்பிராணி நாய்களால் கடித்ததில்  பலத்த காயம் ஏற்பட்டது. இது தற்போது பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில், இப்பொழுது மீண்டும் ஒரு கோரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதாவது, உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டில் ஒரு சிறுமி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த லிப்ட்டுக்குள் நுழைந்த ஒரு நாய் அந்த சிறுமியை கையில் கடித்துள்ளது. இதனால் அலறிய அந்த சிறுமியின் குரலை கேட்டு அங்கு ஒருவர் வந்து நாயை பற்றியுள்ளார். லிப்ட்டின் கதவு மூடப்பட்ட உடன், சிறுமி வலியுடன் கையை அசைப்பதை வீடியோவில் காண முடிகிறது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் சற்று பீதியில் இருந்து வருகின்றனர். நொய்டாவில் சிறுமியை கடித்துக் குதறிய நாய்

டெல்லியில் பரவும் மர்ம நோய் – மருத்துவமனையில் கொத்து கொத்தாக சேரும் மக்கள் – திண்டாடும் தலைநகரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *