ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம் - அமலுக்கு வந்த சட்டம்!!ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம் - அமலுக்கு வந்த சட்டம்!!

ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்: தமிழகத்தில் இப்பொழுது வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாவுக்கு சென்று வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் கட்டாயம் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

குறிப்பாக அங்கு இருக்கும் வணிகர்கள் தான் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும்  நீதிமன்றம் உத்தரவில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. மேலும் சுற்றுலா பயணிகள்  epass.tnega.org  என்ற இணையதளத்திற்கு சென்று இ-பாஸ்க்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சுற்றுலா பயணிகள் மொபைல் மூலமாகவோ அது மெயில் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்நிலையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இ பாஸ் கட்டாயம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. 

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம் அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *