பிரேமலதா மீது வழக்குப்பதிவு., தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார்.., என்ன நடந்தது?பிரேமலதா மீது வழக்குப்பதிவு., தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார்.., என்ன நடந்தது?

பாராளுமன்ற தேர்தல்

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக 700க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் களத்தில் இறங்கி அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். எனவே உரிய ஆவணம் இல்லாமல் பணம், நகைகள் மற்றும் பொருட்கள் ஆகியவை கொண்டு செல்ல கூடாது என்று பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று கூட மதுரை அவனியாபுரம் அருகே 18 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா மீது வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தேமுதிக கட்சி அதிமுக கட்சியுடன் கூட்டணி வைப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதற்கிடையில்   பிரேமலதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் கட்சி அலுவலகத்தில் வைத்து சுமார் 300 பேருக்கு இலவச தையல் மிஷின் டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் உரிய அனுமதி வாங்க பேனர் வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2024 மக்களவை தேர்தல்., கணக்கிடப்படாத 18 கோடி தங்க நகைகள் பறிமுதல்.., மதுரையில் பரபரப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *