வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு சூப்பர் வசதி - சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்?வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு சூப்பர் வசதி - சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்?

வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு சூப்பர் வசதி: தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து வெப்பத்தின் தாக்கம் அளவுக்கு மீறி அதிகமாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் சென்னை,மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் உக்கிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு  உரிய வசதிகளை செய்து தர தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ” தொழிலாளர்கள் தங்கள் பணிகளை காலையில் விரைவாக தொடங்கி மதிய வேளையில் இடைவேளை வழங்க வேண்டும். இதையடுத்து, மாலையில் வெயில் குறைந்த பிறகு பணிகளை தொடங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் கட்டடப் பணி, கல் குவாரி, தொழிற்சாலைகள், சாலை அமைத்தல் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பணிபுரியும் இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. 

சென்னை உஸ்மான் சாலையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம் – எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *