சாக்லேட் கொடுத்து 3 சிறுமிகளை பாலியல் கொடுமை செய்த நபர்.., பொறி வைத்து பிடித்த காவல்துறை.., சென்னையில் பரபரப்பு!! சாக்லேட் கொடுத்து 3 சிறுமிகளை பாலியல் கொடுமை செய்த நபர்.., பொறி வைத்து பிடித்த காவல்துறை.., சென்னையில் பரபரப்பு!!

உலகில் பெரும்பாலான பகுதிகளில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்தின் முக்கிய பகுதியான திருவான்மியூரை ஒரு தந்தை தனது மகள் உட்பட மொத்தம் மூன்று சிறுமிகள் யாரோ அடையாள தெரியாத நபர் ஒருவர் சாக்லேட் தருவதாக கூறி ஆளே இல்லாத வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தாகவும், அதற்கு 10 வயது சிறுவன் உதவியதாகவும் கூறி நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில், குற்றவாளியை பிடிக்க தனிப்படையினர் மூலம் தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமிகளை சீரழித்தவர் அடையார் மல்லிப்பூ காலனி பகுதியை சேர்ந்த யோவான்(30 என்று சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது தெரிய வந்தது. மேலும் அவர்  திருவான்மியூர் அருகே திரிந்ததாக போலீசுக்கு தகவல் கிடைத்த நிலையில், அவரை வளைத்து பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து யோவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.        

விஜய் டிவி ரோபோ சங்கர் வீட்டில் நடந்த விசேஷம்., யாரெல்லாம் போயிருக்காங்கனு பாருங்களே.., போட்டோ உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *